ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 April 2021 8:38 PM GMT (Updated: 6 April 2021 8:38 PM GMT)

வத்திராயிருப்பில் தி.மு.க.வினர் வாக்குச்சாவடி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வத்திராயிருப்பு, 
வத்திராயிருப்புக்கு உட்பட்ட 17-வது வார்டு அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் வாக்குச்சாவடி முன்பு வாக்காளர்களுக்கு அ.தி.மு.க. டோக்கன் வழங்கியதாக தெரிகிறது. இதுகுறித்து வாக்குச்சாவடி முன்பு இருந்த தி.மு.க.வினர் கேட்டனர். இதையடுத்து அ.தி.மு.க. பிரமுகர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். பின்னர் தி.மு.க.வினர் வாக்குச்சாவடி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வாக்குச்சாவடியில் சிறிது நேரம் வாக்குப்பதிவு தாமதம் ஆனது. இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு இமானுவேல் ராஜ்குமார் மற்றும் வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் சுபக்குமார் ஆகியோர் வாக்குச்சாவடி முன்பு திரண்டிருந்த தி.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். தொடர்ந்து வாக்குப்பதிவு நடந்தது. 


Next Story