ஒரே நாளில் 141 பேருக்கு கொரோனா


ஒரே நாளில் 141 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 7 April 2021 5:24 PM GMT (Updated: 7 April 2021 5:24 PM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுபோல் சிகிச்சை பலன் இன்றி ஒருவர் பலியானார்.

திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுபோல் சிகிச்சை பலன் இன்றி ஒருவர் பலியானார்.
141 பேருக்கு கொரோனா
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு
 முன்பு வரை நாள் ஒன்றின் பாதிப்பு 50-க்கும் குறைவாக இருந்தது. தற்போது 100-ஐயும் கடந்து வந்தது. இதற்கிடையே நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவருக்கும் தற்போது திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 1ஆக உள்ளது. இதுபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 56 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். இவர்கள் அனைவரையும் 14 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஒருவர் பலி
மேலும், திருப்பூர் மாவட்டத்தில்  735 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 38ஆக உள்ளது. இந்நிலையில் திருப்பூரை சேர்ந்த 85 வயது முதியவருக்கு கடந்த 2ந் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதற்கிடையே சிகிச்சை பலன் இன்றி அவர் பலியானார். தற்போது மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 228ஆக உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் உஷாராகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. 

Next Story