மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு சீல் வைப்பு


மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு சீல் வைப்பு
x
தினத்தந்தி 7 April 2021 6:00 PM GMT (Updated: 7 April 2021 6:00 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட பாதுகாப்பு அறைக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட  பாதுகாப்பு அறைக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 
சீல் வைப்பு 
திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, திருவாரூர்,  நன்னிலம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகள்  உள்ளன. இந்த தொகுதிகளில் வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் திருவாரூர் திரு.வி.க. அரசு கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு பாதுகாப்பு அறையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டன.
இதனையடுத்து நேற்று தேர்தல் பொது பார்வையாளர்கள் சந்திரமோகன் பிரசாத் காசியாப், ராம்லஹான் பிரஷாத் குப்தா, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பாலசந்திரன், அழகர்சாமி மற்றும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட பாதுகாப்பு அறைக்கு சீல் வைக்கப்பட்டது.
கண்காணிப்பு கேமராக்கள்
மின்னணு வாக்குப்பதிவு எந்தரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் போலீசார் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். வாக்கு எண்ணும் மையம், பாதுகாப்பு அறை முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்கப்படுகிறது. கட்டுப்பாட்டு அறையிலிருந்து ஒரு சட்டசபை தொகுதிக்கு 1 துணை தாசில்தார் நிலையிலான அலுவலர் நியமிக்கப்பட்டு சூழற்சி முறையில் 4 அலுவலர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். 
வேட்பாளர்களின் பிரதிநிதிகள் 24 மணிநேரமும் பார்வையிடுவதற்கு ஏதுவாக கல்லூரி வளாகத்தில் தொலைக்காட்சி வசதியுடன் தனி அறை அமைக்கப்பட்டுள்ளது. வளாகம் முழுவதும் 24 மணிநேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கிட மின்னாக்கி அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் (மே) 2-ந் தேதி நடைபெற உள்ளது.

Next Story