விபத்தில் கூலி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்


விபத்தில் கூலி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்
x
தினத்தந்தி 7 April 2021 7:03 PM GMT (Updated: 7 April 2021 7:03 PM GMT)

கொட்டாம்பட்டி அருகே சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்

கொட்டாம்பட்டி
சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை அருகே உள்ள நீலமேகம்பட்டியை சேர்ந்தவர் மச்சக்காளை. இவருடைய மகன் பழனியப்பன் (வயது 50). சைக்கிளில் சென்று பழைய பிளாஸ்டிக் பொருட்கள், பாட்டில்கள் சேகரிக்கும் வேலை செய்து வருகிறார் இந்தநிலையில் நேற்று கொட்டாம்பட்டியில் இருந்து பள்ளபட்டிக்கு நான்கு வழி சாலையில் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது  மதுரையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் சைக்கிள் மீது மோதியதில் தூக்கிவீசப்பட்ட கூலி தொழிலாளி பழனியப்பன் சம்பவ இடத்திலேயே பறிதாபமாக உயிருழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த கொட்டாம்பட்டி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து கார் டிரைவர் அருப்புக்கோட்டையை சேர்ந்த பிரசன்னபாலாஜி(28)  என்பரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story