மதுக்கடைகள் திறப்பு


மதுக்கடைகள் திறப்பு
x
தினத்தந்தி 7 April 2021 7:03 PM GMT (Updated: 7 April 2021 7:03 PM GMT)

தேர்தல் விடுமுறைக்கு பிறகுமதுக்கடைகள் திறக்கப்பட்டன.

சிங்கம்புணரி,

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி கடந்த 4-ந்தேதியில் இருந்து வாக்குப்பதிவு நாளான 6-ந்தேதி வரை 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டு இருந்தது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டு இருந்தன. மதுக்கடைகள் மூடப்படுவதை அறிந்த மதுபிரியர்கள் ஏற்கனவே தங்களுக்கு பிடித்தமான மதுரகங்களை கூடுதலாக வாங்கி சென்று விட்டனர்.
சிங்கம்புணரி பகுதிகளிலும் மதுக்கடைகள் மூடப்பட்டு இருந்தன. இந்த நிலையில் 3 நாட்கள் விடுமுறை முடிந்ததையொட்டி நேற்று வழக்கம் போல மதுக்கடைகள் திறக்கப்பட்டன. அந்த மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. சிங்கம்புணரி வேங்கைப்பட்டி சாலையில் மதுக்கடையில் நேற்று மஞ்சுவிரட்டு விழாவை காண வந்த மதுபிரியர்கள் மதுபாட்டில்களை மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றதை பார்க்க முடிந்தது.

Next Story