ஊரப்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் ஓட்டல் தொழிலாளி பலி


ஊரப்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் ஓட்டல் தொழிலாளி பலி
x
தினத்தந்தி 8 April 2021 1:49 AM GMT (Updated: 8 April 2021 1:49 AM GMT)

ஊரப்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் ஓட்டல் தொழிலாளி பலியானார்.

தவறி விழுந்தார்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் யாதவர் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 51), இவர் சென்னையில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் சொந்த ஊருக்கு சென்று ஓட்டு போடுவதற்காக சரவணன் தனது நண்பர் சுகுமார் என்பவருடன் கடந்த 5-ம் தேதி இரவு மோட்டார் சைக்கிளில் சென்னையில் இருந்து கலசப்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

ஊரப்பாக்கம் அருகே செல்லும்போது நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த சரவணன் படுகாயம் அடைந்தார்.

சாவு

அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சுகுமார் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.


Next Story