தூத்துக்குடியில் பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது


தூத்துக்குடியில் பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது
x
தினத்தந்தி 8 April 2021 11:53 AM GMT (Updated: 8 April 2021 11:53 AM GMT)

தூத்துக்குடியில் பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். தொடர்ந்து அவர் தூத்துக்குடியில் உள்ள விடுதிகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது எட்டயபுரம் ரோட்டில் உள்ள ஒரு விடுதியில் சிலர் பணம் வைத்து சூதாடிக்கொண்டு இருந்தனர். உடனடியாக அவரது தலைமையில் போலீசார் அங்கு சென்று சூதாடிக் கொண்டிருந்த சுந்தரபாண்டி (வயது 44), ஜோசப் ஸ்டாலின் (50), முனியசாமி (45), சுரேஷ் மணி (42), ஜேசுராஜ் (32) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.32 ஆயிரத்து 600 பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story