நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா


நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 8 April 2021 5:11 PM GMT (Updated: 8 April 2021 5:13 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல்,

தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 12 ஆயிரத்து 317 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே நேற்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது.

இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,334 ஆக உயர்ந்து உள்ளது. இவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 16 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர்.

இந்த நிலையில் நேற்று கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் இயங்கி வரும் வேளாண்மை இணை இயக்குனர் அலுவலக உதவியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு கிருமிநாசினி தெளிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்றது.

Next Story