நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 15 காசுகள் உயர்வு 435 காசுகளாக நிர்ணயம்


நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 15 காசுகள் உயர்வு 435 காசுகளாக நிர்ணயம்
x
தினத்தந்தி 8 April 2021 5:13 PM GMT (Updated: 8 April 2021 5:14 PM GMT)

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 15 காசுகள் உயர்த்தப்பட்டு 435 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

நாமக்கல்,

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 420 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை அதிரடியாக 15 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 435 காசுகளாக உயர்ந்து உள்ளது. பிற மண்டலங்களில் முட்டை விலை காசுகளில் வருமாறு:- 

சென்னை-450, ஐதராபாத்-393, விஜயவாடா-411, மைசூரு-450, மும்பை-448, பெங்களூரு-445, கொல்கத்தா-465, டெல்லி-408. முட்டைக்கோழி கிலோ ரூ.70-க்கும், கறிக்கோழி கிலோ ரூ.122-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.

கோடை வெயிலின் காரணமாக நாமக்கல் மண்டலத்தில் முட்டை உற்பத்தி 15 சதவீதம் வரை சரிவடைந்து உள்ளது. அதேசமயம் முட்டையின் தேவை அதிகரித்து உள்ளது. இதுவே முட்டை கொள்முதல் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
நாமக்கல் மண்டலத்தில் கடந்த 10 நாட்களில் முட்டை கொள்முதல் விலை 45 காசுகள் உயர்ந்து இருப்பதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Next Story