வரத்து அதிகரிப்பால் தேங்காய் பருப்பு விலை வீழ்ச்சி


வரத்து அதிகரிப்பால் தேங்காய் பருப்பு விலை வீழ்ச்சி
x
தினத்தந்தி 8 April 2021 6:05 PM GMT (Updated: 8 April 2021 6:05 PM GMT)

வரத்து அதிகரிப்பால் தேங்காய் பருப்பு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

நொய்யல்
கரூர் மாவட்டம் புன்னம்சத்திரம், புன்னம், குட்டக்கடை, மூலிமங்கலம், தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் தென்னை பயிரிட்டுள்ளனர். இதையடுத்து தேங்காய்கள் விளைந்தவுடன் பறித்து அதில் இருந்து பருப்பை எடுத்து காயவைத்து ெமாத்தமாகவும், சில்லறையாகவும் விற்கின்றனர். வரத்து அதிகரிப்பால் கடந்த வாரம் ஒரு கிலோ தேங்காய் பருப்பு ரூ.132-க்கு விற்றது தற்போது ரூ.131-க்கு விற்பனையானது. இதனால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

Next Story