11 பேருக்கு கொரோனா தொற்று


11 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 8 April 2021 7:27 PM GMT (Updated: 8 April 2021 7:27 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் 15 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் இதுவரை 2 ஆயிரத்து 330 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 2 ஆயிரத்து 286 பேர் சிகிச்சை பெற்று குணம் அடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 21 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் பெரம்பலூர் வட்டாரத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது பெரம்பலூர், சிதம்பரம், திருச்சி, அரியலூர், காஞ்சீபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும், பெரம்பலூர், தஞ்சை, சென்னை அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் 23 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது சுகாதாரத்துறை சார்பில் இதுவரை 21,808 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Next Story