நெல் ஏற்றிச்சென்ற மினி லாரி மோதி வாலிபர் பலி


நெல் ஏற்றிச்சென்ற மினி லாரி மோதி வாலிபர் பலி
x
தினத்தந்தி 8 April 2021 7:42 PM GMT (Updated: 8 April 2021 7:42 PM GMT)

நெல் ஏற்றிச்சென்ற மினி லாரி மோதி வாலிபர் பலியானார்.

திருமயம்
திருமயம் அருகே உள்ள சேதுராப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் திருப்பதி (வயது 27). கூலித் தொழிலாளியான இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் சேதுராப்பட்டியிலிருந்து திருமயத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திருமயத்தில் இருந்து நெல் ஏற்றி வந்த மினி லாரி ஒன்று காட்டுப்பட்டி முக்கம் பகுதியில் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து திருமயம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story