பாலக்கோடு அருகே என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை


பாலக்கோடு அருகே என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 8 April 2021 9:59 PM GMT (Updated: 8 April 2021 10:01 PM GMT)

பாலக்கோடு அருகே என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பாலக்கோடு,

பாலக்கோடு அருகே பொம்மிடி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 23). பி.இ. பட்டதாரி. என்ஜினீயரான இவருக்கு வேலை கிடைக்கவில்லை. இந்தநிலையில் அவர் கடந்த சில மாதங்களாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். 

நேற்று வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story