சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு


சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
x
தினத்தந்தி 9 April 2021 6:09 PM GMT (Updated: 9 April 2021 6:09 PM GMT)

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

வேலாயுதம்பாளையம்
வேலாயுதம்பாளையம் அருகே நஞ்சை புகளூரில் பிரசித்தி பெற்ற மேகபாலீஸ்வரார் கோவில் உள்ளது. இக்கோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், மஞ்சள் உள்பட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சிவபெருமானுக்கு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பின்னர் ரிஷப வாகனத்தில் சுவாமி கோவிலை சுற்றி வலம் வந்தனர்.
இதேபோல் காகிதபுரம் குடியிருப்பில் உள்ள காசிவிஸ்வநாதர் கோவில், தோட்டக்குறிச்சி சொக்கநாதர் கோவில், நன்னீர் மரகதஈஸ்வரர் கோவில்உள்பட பல்வேறு சிவன்கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் புன்னம் பகுதியில் உள்ள புன்னைவன நாதர் கோவிலில் உள்ள நந்திபவானுக்கு பால், பழம், மஞ்சள், விபூதி உள்பட பல்வேறு அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சுவாமி ரிஷப வாகனத்தில் மூன்று முறை கோவிலை வலம் வந்தார். குந்தாணிபாளையம் நத்தமேடு ஈஸ்வரன் கோவிலலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தோகைமலை அருகே ஆர்.டி.மலை மலை மேல் விராச்சிலை ஈஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்திபகவானுக்கு பால், பழம், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து நந்திபகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாாதனை நடந்தது. இதேபோல கழுகூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. 
இதேபோல் லாலாபேட்டை யில் உள்ள செம்பொற் ஜோதிஸ்வரர் கோவிலில் நந்திபகவானுக்கு பால், பழம் உள்பட பல்வேறு அபிஷேகம் நடந்தது. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபராதனை நடந்தது.

Next Story