தென்காசியில் 41 பேருக்கு கொரோனா


தென்காசியில் 41 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 9 April 2021 8:06 PM GMT (Updated: 9 April 2021 8:06 PM GMT)

தென்காசி மாவட்டத்தில் 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தென்காசி, ஏப்:
தென்காசி மாவட்டத்தில் புதிதாக 41 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரி, ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இவர்களுடன் சேர்த்து தென்காசி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 ஆயிரத்து 930 ஆக உயர்ந்துள்ளது. இதில் 8 ஆயிரத்து 544 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 225 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 161 பேர் இறந்து உள்ளனர்.

Next Story