திருவள்ளூரில் வீரராகவ பெருமாள் கோவிலில் 2 நாட்கள் பக்தர்கள் தரிசனம் ரத்து


திருவள்ளூரில் வீரராகவ பெருமாள் கோவிலில் 2 நாட்கள் பக்தர்கள் தரிசனம் ரத்து
x
தினத்தந்தி 10 April 2021 4:35 AM GMT (Updated: 10 April 2021 4:35 AM GMT)

திருவள்ளூரில் உள்ள பழமை வாய்ந்த 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் வீரராகவ பெருமாள் கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக தமிழக அரசின் பரிந்துரையின் படி திருவள்ளூரில் உள்ள பழமை வாய்ந்த வீரராகவ பெருமாள் கோவில் இன்று(சனிக்கிழமை) மதியம் 12 மணி முதல் நாளை(ஞாயிற்றுக்கிழமை) இரவு வரை பக்தர்களுக்கு தரிசனம் செய்ய தடை செய்யப்படுகிறது என அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

 


Next Story