கொரோனா தடுப்பூசி முகாம்


கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 10 April 2021 11:08 AM GMT (Updated: 10 April 2021 11:08 AM GMT)

வாணியம்பாடி, ஆலங்காயம் பகுதியில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடந்தது.

வாணியம்பாடி
வாணியம்பாடி, ஆலங்காயம் பகுதியில் கொரோனா தடுப்பூசி போடும்  முகாம் நடந்தது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகை மற்றும் அடகு கடை வியபாரிகள் சங்கம் சார்பாக வியாபாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் அம்பூர்பேட்டை இந்து தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.

 ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி, நகராட்சி ஆணையாளர் அண்ணாமலை ஆகியோர் தலைமை தாங்கினர். நகராட்சி சுகாதார அலுவலர் கணேஷ், வியபாரிகள் சங்க தலைவர் சந்திரபிரகாஷ் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்துக் கொண்டனர். 

ஆலங்காயம் வட்டார மருத்துவ எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 560 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. 

இதேபோல் ஆலங்காயம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற முகாமில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் 50 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

Next Story