நடந்து சென்ற பெண்ணிடம் 9 பவுன் நகை பறிப்பு


நடந்து சென்ற பெண்ணிடம் 9 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 10 April 2021 4:12 PM GMT (Updated: 10 April 2021 4:12 PM GMT)

வேலூரில் நடந்து சென்ற பெண்ணிடம் 9 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

வேலூர்

வேலூரில் நடந்து சென்ற பெண்ணிடம் 9 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

வேலூர் சலவன்பேட்டை லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் செல்வகுமார், வேலூர் மாவட்ட லாரி உரிமையாளர் சங்க தலைவர். இவரது மனைவி பாரதி (வயது 57). இவர் அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு ,இன்று காலை வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.  

 அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார்சைக்கிளில் ஒருவர் சென்றார். யாரும் இல்லாத இடத்தில் அந்த நபர் திடீரென பாரதியின் கழுத்தில் இருந்த சுமார் 9 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார்.

இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் அந்த பகுதியில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பாரதியிடம், மோட்டார்சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்மநபர் நகை பறித்தது பதிவாகி இருந்தது. அதை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story