மேலும் 55 பேருக்கு கொரோனா


மேலும் 55 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 10 April 2021 6:35 PM GMT (Updated: 10 April 2021 6:35 PM GMT)

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

விருதுநகர், 
மாவட்டத்தில் மேலும் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிைலயில் பாதிப்பு எண்ணிக்கை 17,100 ஆக உயர்ந்துள்ளது. 16,689 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 178 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 234 பேர் நோய் பாதிப்பிற்கு பலியாகி உள்ளனர். கடந்த 3 நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை 25-க்கும் குறைவாக இருந்த நிலையில் நேற்று திடீரென பாதிப்பு 55 ஆக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story