2 பெண்களிடம் நகைபறிக்கப்பட்டது


2 பெண்களிடம் நகைபறிக்கப்பட்டது
x
தினத்தந்தி 10 April 2021 7:09 PM GMT (Updated: 10 April 2021 7:09 PM GMT)

2 பெண்களிடம் நகை பறிப்பு

மதுரை
மதுரை பழைய விளாங்குடி முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தனசேகரவிஜயன். தி.மு.க. பிரமுகர். இவரது மனைவி தங்கலெட்சுமி(வயது 40). சம்பவத்தன்று இரவு இவர் காற்றுக்காக வீட்டின் முன்கதவை திறந்து வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அதிகாலை நேரத்தில் மர்மநபர் அவரது வீட்டிற்குள் நுழைந்தார். அவர் தங்கலெட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 7½ பவுன் நகையை பறித்து கொண்டு தப்பிவிட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை மேலப்பொன்னகரம் 5-வது தெருவை சேர்ந்தவர் ஆண்டாள் (வயது 55). இவர் மேலப்பொன்னகரம் மெயின்ரோட்டில் நடைபயிற்சி சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் அந்த வழியாக வந்தனர். அவர்கள் திடீரென்று ஆண்டாள் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பிவிட்டனர். இதுகுறித்து ஆண்டாள் கரிமேடு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

Next Story