34 பேருக்கு கொரோனா


34 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 10 April 2021 7:19 PM GMT (Updated: 10 April 2021 7:19 PM GMT)

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.நேற்று ஒரே நாளில் காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, கோட்டையூர், திருப்பத்தூர், தேவகோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 117 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் பூரண குணமடைந்த 20 பேர் வீடு திரும்பினர்.

Next Story