நீடாமங்கலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


நீடாமங்கலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 April 2021 2:00 PM GMT (Updated: 11 April 2021 2:00 PM GMT)

அரக்கோணம் அருகே மோகனூரில் நடைபெற்ற இரட்டை கொலையை கண்டித்து நீடாமங்கலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீடாமங்கலம், 

அரக்கோணம் அருகே மோகனூரில் நடைபெற்ற இரட்டை கொலையை கண்டித்து நீடாமங்கலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் புதியவன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் வீரகுமார், ஒன்றிய துணை செயலாளர் அண்ணாத்துரை, மாவட்ட அமைப்பாளர் தமிழ்வளவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அரக்கோணம் அருகே மோகனூரில் நடைபெற்ற இரட்டை கொலையை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதைப்போல திருவாரூரிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story