சிறுமி கடத்தி திருமணம் 2 பேருக்கு வலைவீச்சு


சிறுமி கடத்தி திருமணம் 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 11 April 2021 5:15 PM GMT (Updated: 11 April 2021 5:15 PM GMT)

சிறுமி கடத்தி திருமணம் செய்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

குளித்தலை
கரூர் மாவட்டம், கடவூர் பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி (வயது 26). இவர் 14 வயதுடைய ஒரு சிறுமியை கடத்தி சென்றதாக சிறுமியின் தாயார் குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த மாதம் புகார் அளித்திருந்தார். இந்தநிலையில் அந்த சிறுமி மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். இதுகுறித்து குழந்தைகள் உதவி மைய அலுவலர்கள் விசாரித்ததில், அந்த சிறுமியை மயில்சாமி திருமணம் செய்து அவருடன் உறவு வைத்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த சிறுமியின் தாயார் அளித்த புகாரின்பேரில் சிறுமியை திருமணம் செய்த மயில்சாமி மற்றும் அவருக்கு உதவிய அவரது தம்பி பழனிச்சாமி (23) ஆகிய இருவர் மீதும் குழந்தை திருமணம் தடுப்புச்சட்டம் மற்றும் போக்சோ சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குளித்தலை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவர்களை தேடிவருகின்றனர்.


Next Story