தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 11 April 2021 6:45 PM GMT (Updated: 11 April 2021 6:45 PM GMT)

களக்காடு அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

களக்காடு, ஏப்:
களக்காடு அருகே உள்ள ஜெ.ஜெ.நகர் கீழகாலனி பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் குமார் மகன் பாஸ்கர் என்ற பாலன் (வயது 23). கூலி தொழிலாளியான இவர் கடந்த சில நாட்களுக்கு முன் சோகத்துடன் காணப்பட்டார். இதைப்பார்த்த அவரது தாயார் சுப்பம்மாள் பாலனிடம் விசாரித்தார். அதற்கு அவர் பதில் எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் சம்பவத்தன்று பாலன் வீட்டில் சேலையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் தேவி வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story