விழுப்புரம் மாவட்டத்தில் 61 பேருக்கு கொரோனா தொற்று
கொரோனா
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 15,938 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 113 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து 15,474 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ள 351 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் நேற்று வெளிவந்தது. இதில் ஒரே நாளில் 61 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை, விழுப்புரம் கொரோனா சிறப்பு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story