வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் 15 பேர் மீது வழக்கு


வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் 15 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 12 April 2021 8:12 PM GMT (Updated: 12 April 2021 8:12 PM GMT)

தேர்தலின்போது இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மங்களமேடு:
மங்களமேட்டை அடுத்துள்ள எறையூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மகன் தேவன்(வயது 26). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி பாசறை செயலாளராக உள்ளார். இவர் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றபோது, எறையூர் நேரு ஆரம்பப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது தெருவில் கட்சி கொடிகள் கட்டப்பட்டது தொடர்பாக, அதே ஊரை சேர்ந்த மணிகண்டன், ஜெய்சங்கர், முத்தமிழ்செல்வன் உள்ளிட்ட 15 பேர் தேவனிடம் தகராறு செய்துள்ளனர். இதில் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்து தேவன் மங்களமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story