நாமக்கல்லில் சினிமா நடிகர் தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை


நாமக்கல்லில் சினிமா நடிகர் தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 12 April 2021 9:13 PM GMT (Updated: 12 April 2021 9:13 PM GMT)

நாமக்கல்லில் சினிமா நடிகர் தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை

நாமக்கல்:
நாமக்கல்லில் சினிமா நடிகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சினிமா நடிகர்
நாமக்கல் கங்காநகரை சேர்ந்தவர் தியாகராஜன். தொழில் அதிபர். இவரது மகன் குமாரராஜன் (வயது 39). இவர் சந்திப்போம், சிந்திப்போம் என்ற சினிமா படத்தில் நடித்து உள்ளார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை இவர் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து உள்ளார். அப்போது அவரது மனைவி சிந்துஜா (35) மதுகுடித்து விட்டு ஏன் வீட்டிற்கு வந்தீர்கள? என சத்தம் போட்டதாக தெரிகிறது.
தற்கொலை
இதையடுத்து கோபித்து கொண்டு படுக்கை அறைக்கு சென்ற நடிகர் குமாரராஜன் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற நாமக்கல் போலீசார் அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக சிந்துஜா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
========

Next Story