பணியின் போது இறந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்துக்கு நிதி உதவி


பணியின் போது இறந்த   போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்துக்கு நிதி உதவி
x
தினத்தந்தி 13 April 2021 7:34 PM GMT (Updated: 13 April 2021 7:34 PM GMT)

பணியின் போது இறந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கப்பட்டது.

நெல்லை:

நெல்லை மாவட்டம் மாஞ்சோலை போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக சுப்பிரமணியன் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 14.3.2020 அன்று உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இறந்துவிட்டார். பணியில் இருக்கும்போதே இறந்து விட்டதால் தமிழக முதல்-அமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து சுப்பிரமணியன் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், ரூ.3 லட்சத்திற்கான காசோலையை சுப்பிரமணியனின் மனைவி வசந்தகோமதியிடம் வழங்கினார்.

Next Story