50 பேருக்கு கொரோனா


50 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 14 April 2021 6:20 PM GMT (Updated: 14 April 2021 6:20 PM GMT)

இந்தோ-திபெத் எல்லைபாதுகாப்பு படைவீரா் உள்பட 50 பேருக்கு நேற்று சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

சிவகங்கை, 
இந்தோ-திபெத் எல்லைபாதுகாப்பு படைவீரா் உள்பட 50 பேருக்கு நேற்று சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதிகரிப்பு
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் நேற்று சிவகங்கையை அடுத்த இலுப்பைகுடியில் உள்ள இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் உள்ள வீரா் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 ஏற்கனவே இந்த மையத்தில் உள்ள 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு தற்ேபாது அவர்கள் சிவகங்கை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இதுதவிர காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, கோட்டையூர், திருப்பத்தூர், தேவகோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள 50 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுஉள்ளது.
சிகிச்சை
சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 126 பேர் சிகிச்சையில் இருந்தனர். 
இவர்களில் பூரண குணமடைந்த 15 பேர் நேற்று சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினர்.

Next Story