கட்டிட காண்டிராக்டர் தற்கொலை


கட்டிட காண்டிராக்டர் தற்கொலை
x
தினத்தந்தி 14 April 2021 7:57 PM GMT (Updated: 14 April 2021 7:57 PM GMT)

கட்டிட காண்டிராக்டர் தற்கொலை செய்து கொண்டார்

மதுரை
மதுரை ஆனையூர் ஆபிசர்ஸ டவுன் பகுதியை சேர்ந்தவர் சங்கர்(வயது 50). கட்டிட காண்டிராக்டரான இவர், திருமண மண்டபமும் நடத்தி வந்தார். இந்தநிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சங்கர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த கூடல்புதூர் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் முதற்கட்ட விசாரணையில், தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக சங்கர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story