ஏற்காட்டில் சாராயம் விற்றவர் கைது


ஏற்காட்டில் சாராயம் விற்றவர் கைது
x
தினத்தந்தி 14 April 2021 10:58 PM GMT (Updated: 14 April 2021 10:58 PM GMT)

சாராயம் விற்றவர் கைது

ஏற்காடு:
ஏற்காடு மாரமங்களம் ஊராட்சிக்கு உட்பட்ட கேழையூர் கிராமத்தில் சாராயம் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாதையன் மற்றும் போலீசார் அங்கு ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (வயது 30) என்பவர் வீட்டில் 5 லிட்டர் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Next Story