மதுவில் விஷம் கலந்து குடித்து லாரி டிரைவர் தற்கொலை


மதுவில் விஷம் கலந்து குடித்து லாரி டிரைவர் தற்கொலை
x
தினத்தந்தி 15 April 2021 7:14 PM GMT (Updated: 15 April 2021 7:14 PM GMT)

மதுவில் விஷம் கலந்து குடித்து லாரி டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

மீன்சுருட்டி:
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் கொழை அருகே உள்ள நிசங்கன் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 45). லாரி டிரைவர். இவருடைய மனைவி உமா. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உமா இறந்துவிட்டார். 3 மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. மேலும் ராஜேந்திரன், முத்துலெட்சுமி என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கணவன், மனைவி இடையே கடந்த 8 மாதங்களாக கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக இருந்து வந்தனர். இந்நிலையில் ராஜேந்திரன் நேற்று முன்தினம் மாலை மீன்சுருட்டி அருகே பாப்பாக்குடி ஆஞ்சநேயர் கோவில் அருகில் மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டு மயங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்த அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து ராஜேந்திரனின் அண்ணன் சுப்பிரமணியன் கொடுத்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜதுரை வழக்குப்பதிவு செய்து, ராஜேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story