நகை பறித்த வாலிபர் கைது


நகை பறித்த வாலிபர் கைது
x

பெண்ணிடம் நகை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தாயில்பட்டி, 
ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள ஜெகவீரம்பட்டியை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி உஷாதேவி (வயது 25). இவர் வீட்டின் முன்பு கோலம் போட்டு கொண்டு இருந்த போது மர்மநபர் ஒருவர் முகவரி கேட்பது போல் அவர் கழுத்தில் இருந்த செயினை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து உஷாதேவி, ஏழாயிரம்பண்ணை போலீசில் புகார் அளித்தார். இந்தநிலையில் ஏழாயிரம்பண்ணையில் சந்தேகம் அளிக்கும் வகையில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டு இருந்தார். அவரை பிடித்து இன்ஸ்பெக்டர் பாலாஜி விசாரணை நடத்திய ேபாது, உஷாதேவியிடம் இருந்து நகையை பறித்ததும்,  சேதுராமலிங்காபுரத்தைச் சேர்ந்த இளையராஜா (31) என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இளையராஜாவை கைது செய்து 2 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.

Next Story