தடுப்பூசி போட்ட போலீஸ்காரருக்கு கொரோனா
தேனி மாவட்டம் உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் ஒருவருக்கு தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையிலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
தேனி:
தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நேற்று ஒரே நாளில் உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் உள்பட 51 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.
இந்த போலீஸ்காரர் ஏற்கனவே 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளார்.
தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையிலும் அவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதனால், மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்து 771 ஆக உயர்ந்தது.
பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 20 பேர் நேற்று குணமாகி வீடு திரும்பினர்.
இதுவரை பாதிப்பில் இருந்து 17 ஆயிரத்து 213 பேர் மீண்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 381 ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story