உரிமையாளரை தாக்கியவர் மீதுவழக்கு


உரிமையாளரை தாக்கியவர் மீதுவழக்கு
x
தினத்தந்தி 17 April 2021 3:20 PM GMT (Updated: 17 April 2021 3:20 PM GMT)

நாய் குரைத்ததால் உரிமையாளரை தாக்கியவர் மீதுவழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் அருகே உள்ள காட்டூரணி எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது47). இவர் வீட்டில் நாய் வளர்த்து வருகிறார். இந்த நாய் அடிக்கடி குரைத்துள்ளது. இதனை கண்ட அருகில் வசிக்கும் வேங்கையன் (57) என்பவர் கண்டித் துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வேங்கையன் உருட்டு கட்டையால் சிவக்குமாரை சரமாரியாக தாக்கினாராம். இதில் படுகாயம் அடைந்த சிவக்குமார் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து வேங்கையனை தேடிவருகின்றனர்.

Next Story