குண்டர் சட்டம் பாய்ந்தது


குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 17 April 2021 4:12 PM GMT (Updated: 17 April 2021 4:12 PM GMT)

அதிகாரியிடம் தகராறு செய்தவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே உள்ளது செய்யா மங்கலம். இந்த கிராமத்தில் 80 வயதுக்கு மேல் உள்ள 10 வாக்காளர்களின் தபால் வாக்கு சீட்டுகளை பெற்றுக் கொண்டு பரமக்குடி தாலுகா சிவில் சப்ளை அலுவலர் சத்யபாமா தனது காரில் சென்றார். இந்த தபால் ஓட்டுகளில் செய்யாமங்கலம் சுப்பிரமணியனின் தபால் ஓட்டு யாருக்கு போடப்பட்டுள்ளது என சிவில் சப்ளை அலுவலர் சத்ய பாமாவிடம் காட்டுமாறு கூறி சுப்பிரமணியனின் இளைய மகன் சண்முகவேல் (வயது44) வாக்கு வாதம் செய்துள்ளார். மேலும் சத்யபாமா சென்ற கார் கண்ணாடியை உடைத் தாராம். இது தொடர்பாக அபிராமம் போலீசில் சத்யபாமா அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் சண்முக வேலுவை கைது செய்து விருதுநகர் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சண்முகவேலுவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் பரிந்துரையை ஏற்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அதற்கான உத்தரவிட்டார். இதன்படி சண்முகவேலுவை அபிராமம் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story