பெண் தூக்குப்போட்டு தற்கொலை


பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 17 April 2021 5:58 PM GMT (Updated: 17 April 2021 5:58 PM GMT)

பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அரிமளம், ஏப்.18-
அரிமளத்தை  அடுத்த கொல்லக்குடி அருகே உள்ள பாப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜாராம், டிரைவர். இவருடைய மனைவி வினோதினி (வயது 27). இருவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2½ வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக வினோதினி மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக அரிமளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரைக்கண்ணு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story