குளத்தில் மூழ்கி விவசாயி சாவு


குளத்தில் மூழ்கி விவசாயி சாவு
x
தினத்தந்தி 17 April 2021 6:03 PM GMT (Updated: 17 April 2021 6:03 PM GMT)

குளத்தில் மூழ்கி விவசாயி இறந்தார்.

கறம்பக்குடி, ஏப்.18 -
கறம்பக்குடி அருகே உள்ள காட்டாத்தி கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்துரை (வயது 50), விவசாயி. இவர் நேற்று மாலை அப்பகுதியில் உள்ள துண்டுகுளத்திற்கு குளிக்க சென்றார். படிக்கட்டில் நின்று துணி துவைத்தபோது பாசி வழுக்கியதில் ஆழமான பகுதியில் தவறிவிழுந்து நீரில் மூழ்கி இறந்தார். இதுகுறித்து கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியதாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story