கரூர் மாவட்டத்தில் 1 வயது குழந்தை உள்பட புதிதாக 46 பேர் கொரோனா


கரூர் மாவட்டத்தில் 1 வயது குழந்தை உள்பட புதிதாக 46 பேர் கொரோனா
x
தினத்தந்தி 17 April 2021 6:22 PM GMT (Updated: 17 April 2021 6:22 PM GMT)

கரூர் மாவட்டத்தில் 1 வயது குழந்தை உள்பட புதிதாக 46 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரூர் 
1 வயது குழந்தை 
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனாவின் இரண்டாம் அலையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள பட்டியலில் கரூர் மாவட்டத்தில் மேலும் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி பள்ளப்பட்டியை சேர்ந்த 50 வயது பெண் மற்றும் 58 வயது ஆண், குளித்தலையை சேர்ந்த 67 வயது முதியவர் மற்றும் 44 வயது பெண், உப்பிடமங்கலத்தை சேர்ந்த 71 வயது முதியவர், லெட்சுமிபுரத்தை சேர்ந்த 56 வயது ஆண், வேலுச்சாமிபுரத்தை சேர்ந்த 65 வயது முதியவர், வேடிச்சிபாளையத்தை சேர்ந்த 27 வயது வாலிபர், திருக்காம்புலியூரை சேர்ந்த 1 வயது ஆண் குழந்தை.
46 பேருக்கு கொரோனா 
வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த 29 வயது பெண் மற்றும் 20 வயது வாலிபர், சின்னதாராபுரத்தை சேர்ந்த 27 வயது பெண் மற்றும் 26 வயது வாலிபர், பசுபதிபாளையத்தை சேர்ந்த 59 வயது பெண், புலியூரை சேர்ந்த 52 வயது பெண் மற்றும் 47 வயது பெண், தாந்தோணிமலையை சேர்ந்த 55 வயது ஆண், அரவக்குறிச்சியை சேர்ந்த 49 வயது ஆண், ஆண்டாங்கோவிலை சேர்ந்த 65 வயது மூதாட்டி, வாங்கலை சேர்ந்த 30 வயது வாலிபர்.
வெங்கமேட்டை சேர்ந்த 62 வயது மூதாட்டி, வையாபுரிநகரை சேர்ந்த 45 வயது ஆண், தென்னிலையை சேர்ந்த 23 வயது வாலிபர், காந்திகிராமத்தை சேர்ந்த 22 வயது பெண், 60 வயது மூதாட்டி, 71 வயது முதியவர் மற்றும் 23 வயது வாலிபர் உள்பட 46 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story