மது விற்ற பெண் கைது


மது விற்ற பெண் கைது
x
தினத்தந்தி 17 April 2021 8:57 PM GMT (Updated: 17 April 2021 8:57 PM GMT)

மது விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.

உடையார்பாளையம்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தத்தனூர் குடிகாடு கிராமத்தை சேர்ந்த வளர்மதி (வயது 45) என்பவர் டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து வளமர்தியை கைது செய்தனர். அவரிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story