கார் மோதி படுகாயமடைந்த பெண் சாவு
கார் மோதி படுகாயமடைந்த பெண் உயிரிழந்தார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் அருகே உள்ள தண்ணீர்பந்தல் இந்திரா நகரை சேர்ந்தவர் அய்யாவு. இவரது மனைவி சுசீலா(வயது 48). கட்டிட தொழிலாளியான இவர் சம்பவத்தன்று வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர்பந்தலில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார், சுசீலா மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுசீலா நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் அருகே உள்ள தண்ணீர்பந்தல் இந்திரா நகரை சேர்ந்தவர் அய்யாவு. இவரது மனைவி சுசீலா(வயது 48). கட்டிட தொழிலாளியான இவர் சம்பவத்தன்று வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர்பந்தலில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார், சுசீலா மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுசீலா நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story