சீனாபுரம் சந்தையில் ரூ.80 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை
சீனாபுரம் சந்தையில் ரூ.80 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை ஆனது.
பெருந்துறை
சீனாபுரம் சந்தையில் ரூ.80 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை ஆனது.
மாட்டுச்சந்தை
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த சீனாபுரத்தில் மாட்டுச்சந்தை நடைபெற்றது. இந்த சந்தைக்கு தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம், சேலம் மாவட்டம் முத்தநாயக்கன்பட்டி, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, மோர்பாளையம் மற்றும் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
விர்ஜின் கலப்பின பசு மாடுகள் 75-ம், அதன் கிடாரி கன்றுக்குட்டிகள் 100-ம், சிந்து மற்றும் ஜெர்சி பசு மாடுகள் 50-ம், அதன் கிடாரி கன்றுக்குட்டிகள் 100-ம் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன.
ரூ.80 லட்சம்
இதில் விர்ஜின் பசு மாடு ஒன்று ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையும், அதன் கிடாரி கன்றுக்குட்டி ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையும் விற்பனை ஆனது.
சிந்து மற்றும் ஜெர்சி பசு மாடு ஒன்று ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையும், அதன் கிடாரி கன்றுக்குட்டி ஒன்று ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையும் விற்பனை செய்யப்பட்டது. பசு மாடுகள் மொத்தம் ரூ.80 லட்சத்துக்கு விற்பனை ஆனதாக சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.
பெருந்துறை, காஞ்சிக்கோவில், நல்லாம்பட்டி, பெத்தாம்பாளையம், திங்களூர், குன்னத்தூர், ஊத்துக்குளி, திருப்பூர், சென்னிமலை, வெள்ளோடு, அவல்பூந்துறை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் இங்கு வந்து மாடுகளை விலை பேசி பிடித்து சென்றனர்.
Related Tags :
Next Story