கொரோனா தடுப்பூசி முகாம்


கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 17 April 2021 9:27 PM GMT (Updated: 17 April 2021 9:27 PM GMT)

வத்திராயிருப்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

வத்திராயிருப்பு, 
வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜாரில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை வத்திராயிருப்பு போலீசார் மற்றும் சுகாதாரத்துறையினர் இணைந்து நடத்தினர். வட்டார மருத்துவ அலுவலர் ஜெயராமன் தலைமையில் ஆன சுகாதாரத்துறையினர் வத்திராயிருப்பில் உள்ள வணிக நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீசார் என 252 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டனர்.  முகாமிற்கான ஏற்பாடுகளை வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் சுபக்குமார் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.


Next Story