கொரோனா பரவலை தடுக்க கிருமிநாசினி தெளிக்கும் பணி


கொரோனா பரவலை தடுக்க கிருமிநாசினி தெளிக்கும் பணி
x
தினத்தந்தி 18 April 2021 2:12 PM GMT (Updated: 18 April 2021 2:12 PM GMT)

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சி பகுதியில் கொரோனா பரவலை தடுக்க கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

உத்தமபாளையம்: 

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் தென்றல் நகர், போலீஸ் குடியிருப்பு, தண்ணீர் தொட்டி தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன் 18 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. 

அந்த 18 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த நிலையில் தேனி மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவின்பேரில் பேரூராட்சி செயல் அலுவலர் திருமலைக்குமார் தலைமையில் ஊழியர்கள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதில் முக கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். 

மேலும் பொதுஇடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். 

இதைத்தவிர பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீதி, வீதியாக எந்திரங்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் சுகாதார பணியாளர்களை கொண்டு கொரோனா பரவலை தடுக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 


Next Story