கரூரில் வாகன உதிரிபாகங்கள் விற்பனை கடையில் ரூ.80 திருட்டு ஆயிரம்
கரூரில் வாகன உதிரிபாகங்கள் விற்பனை கடையில் ரூ.80 ஆயிரத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கரூர்
பணம் திருட்டு
கரூர் திருக்காம்புலியூர் ரவுண்டானா பகுதியில் பொன்னர் சங்கர் நகரை சேர்ந்த கார்த்திக் (வயது 32). இவர் கரூர் பைபாஸ் ரவுண்டானாவில் வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் பணி முடித்து கடையை மூடி விட்டு சென்றார். பின்னர் நேற்று காலையில் வழக்கம்போல், வந்து கடையை திறந்து உள்ளே சென்றார்.
கடையின் உள்பகுதியில் உள்ள காற்று வெளியேறும் காற்றாடி அகற்றப்பட்டு கிடந்தது. இதையடுத்து அவர் கல்லாப் பெட்டியை திறந்து பார்த்தபோது, அதில் அவர் வைத்திருந்த ரூ.79 ஆயிரத்து 920-ஐ மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
இதுகுறித்து கார்த்திக் கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எழிலரசன் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story