ஏ.டி.எம். மையத்தில் கிடந்த ரூ.10 ஆயிரம் போலீசில் ஒப்படைப்பு


ஏ.டி.எம். மையத்தில் கிடந்த ரூ.10 ஆயிரம் போலீசில் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 18 April 2021 7:05 PM GMT (Updated: 18 April 2021 7:05 PM GMT)

ஏ.டி.எம். மையத்தில் கிடந்த ரூ.10 ஆயிரம் போலீசில் ஒப்படைக்கப்பட்டது.

நெல்லை:

பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் மகாலட்சுமி நகரைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் திருமலைநம்பி (வயது 28). இவர் மகாராஜநகர் உழவர் சந்தை பாலம் அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்க சென்றார்.

அப்போது அங்குள்ள எந்திரத்தில் ரூ.10 ஆயிரம் வெளியே வந்து விழுந்து கிடந்தது. இதைக்கண்ட திருமலைநம்பி அந்த பணத்தை எடுத்து ஐகிரவுண்டு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரது நேர்மையை போலீசார் பாராட்டினர். 

மேலும் அந்த பணத்துக்கு உரிய நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Next Story