திருச்செங்கோடு அருகே மொபட்டில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலி


திருச்செங்கோடு அருகே மொபட்டில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலி
x
தினத்தந்தி 18 April 2021 7:19 PM GMT (Updated: 18 April 2021 7:21 PM GMT)

திருச்செங்கோடு அருகே மொபட்டில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலி.

எலச்சிபாளையம்,

திருச்செங்கோடு அருகே சித்தாளந்தூர் புளியம்பட்டி பனங்காடு பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 60). விவசாயி. இவர் கடந்த 11-ந் தேதி குலதெய்வ கோவிலுக்கு சென்று விட்டு திருச்செங்கோடு அருகே மொபட்டில் மண்கரட்டுமேடு என்ற பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் பழனியப்பன் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து திருச்செங்கோடு ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story