செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய உச்சம் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 954 பேர் பாதிப்பு 6 பேர் உயிரிழப்பு


செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய உச்சம் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 954 பேர் பாதிப்பு 6 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 19 April 2021 2:02 AM GMT (Updated: 19 April 2021 2:02 AM GMT)

செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய உச்சமாக கொரோனா தொற்றால் ஒரே நாளில் 954 பேர் பாதிப்புகுள்ளானார்கள். 6 பேர் உயிரிழந்தனர்.

வண்டலூர், 

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 954 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 66 ஆயிரத்து 449-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 58 ஆயிரத்து 696 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்தனர்.

இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 866-ஆக உயர்ந்தது. 6 ஆயிரத்து 878 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 332 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33 ஆயிரத்து 544-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 31 ஆயிரத்து 179 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்தனர்.

இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 480-ஆக உயர்ந்துள்ளது. 1885 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story