கீழடியில் மேலும் ஒரு குழி தோண்டப்பட்டது


கீழடியில் மேலும் ஒரு குழி தோண்டப்பட்டது
x
தினத்தந்தி 19 April 2021 6:18 PM GMT (Updated: 19 April 2021 6:18 PM GMT)

7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியின் போது கீழடியில் மேலும் ஒரு குழி தோண்டப்பட்டது.

 
திருப்புவனம்,

தமிழர்களின் நாகரிகத்தை உலகிற்கு பறை சாற்றிவரும் சிவகங்கை மாவட்டம், கீழடியில் தற்போது 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. கீழடியில் ஏற்கனவே 2 குழிகள் தோண்டப்பட்டன. இதில் ஓடுகள், சேதமுற்ற நிலையில் பானைகள் உள்ளிட்ட மண்பாண்டங்கள், பாசி, மணிகள் உள்ளிட்ட பல பழங்கால பொருட்கள் கிடைத்தன. கொந்தகை, அகரத்திலும் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடக்கின்றன.இந்த நிலையில் கீழடியில் அகழாய்வுக்காக 3-வதாக ஒரு குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.



Next Story