விஷம் குடித்து பெண் தற்கொலை
விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
கறம்பக்குடி, ஏப்.20-
கறம்பக்குடி அருகே உள்ள கருப்பட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மனைவி விஜயபாரதி (வயது 25). இவர்களுக்கு திருமணம் முடிந்து 5 ஆண்டுகள் ஆகிறது, 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று காலையில் விஜயபாரதி வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதைபார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஜயபாரதி இறந்தார். இதுகுறித்து மழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக புதுக்கோட்டை உதவி கலெக்டர்டெய்சி குமார் விசாரணை நடத்தி வருகிறார்.
கறம்பக்குடி அருகே உள்ள கருப்பட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மனைவி விஜயபாரதி (வயது 25). இவர்களுக்கு திருமணம் முடிந்து 5 ஆண்டுகள் ஆகிறது, 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று காலையில் விஜயபாரதி வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதைபார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஜயபாரதி இறந்தார். இதுகுறித்து மழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக புதுக்கோட்டை உதவி கலெக்டர்டெய்சி குமார் விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story